13 7
இந்தியாசெய்திகள்

விஜயின் காணொளி அழைப்பு.. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி

Share

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய், இதுவரை குறைந்தது ஐந்து குடும்பங்களுடன் பேசியுள்ளதாக தவெக தரப்பினர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உரையாடலின் போது, ​​விஜய் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் கரூர் நகருக்கு விரைவில் வருகை தந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி அன்று கரூரில் விஜய்யின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மற்றும் குறைந்தது 60 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் நடந்த மறுநாள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூபா 20 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபா 2 இலட்சமும் இழப்பீடு வழங்குவதாக விஜய் அறிவித்தார்.

அது மாத்திரமன்றி, தவெக தலைவர் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணமும் நிறுத்தப்பட்டதுடன் அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது விஜய் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தை காணொளி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...