WhatsApp Image 2021 10 06 at 2.39.33 AM 1
செய்திகள்இலங்கை

ஊடகவியலாளர் அந்தோனி மார்க்கின் அஞ்சலி நிகழ்வு

Share

உயிரிழந்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க்கின் அஞ்சலி நிகழ்வு, மன்னார் சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில், இன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 78 ஆவது வயதில் கொவிட் தொற்று காரணமாக கடந்த மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவர் மன்னார் மாவட்டத்தில் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 10 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது உரையாற்றிய மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல்,
மக்கள் தமது உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் எந்த இடத்தில் போராட்டங்களை மேற்கொண்டாலும் அந்த இடத்தில் எல்லாம் அவருடைய பிரசன்னமும், ஆதரவையும் வழங்கி வந்த மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் அவர்களின் இழப்பு மன்னார் மாவட்ட மக்களுக்கு பாரிய பேரிழப்பு எனக் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dom penzionera 2
செய்திகள்உலகம்

போஸ்னியாவில் முதியோர் இல்லத்தில் கோரத் தீ விபத்து: 11 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

போஸ்னியாவின் துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) மாலை ஏற்பட்ட...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...