பயணக்கட்டுப்பாடு சுற்றுலாப் பயணிகளுக்கல்ல!! – அமைச்சர் பிரசன்ன!!

prasanna 1 1 1

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பொருந்தாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும் என அவர் கூறினார்.

Bio-bubble திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான ஹொட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதி​களையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அதற்கமைய, வௌிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Exit mobile version