நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரமே நாளை தொடருந்துகளில் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 133 தொடருந்துகள் சேவையில் ஈடுபடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews