Imran Maharoof
செய்திகள்அரசியல்இலங்கை

அமைச்சரின் நக்கல் சிரிப்பின் விளைவால் இன்று கிண்ணியாவில் சோகம் – இம்ரான் மஹ்ரூப்

Share

திருகோணமலை- கிண்ணியாவில், குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் தற்காலிக படகுப்பாதை கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களாவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த பாலத்தை நிர்மாணிக்க முன்னர் அதற்கு தற்காலிக பாதை ஒன்றை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று இராஜாங்க அமைச்சரிடம் அன்று நான் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் அவர் அதனை நக்கலாக எடுத்துக்கொண்டார்.

ஆனால் இன்று பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து அரசின் அசண்டையீனம் காரணமாகவே நடந்துள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

குறித்த பாதை சட்டபடி இயங்குகிறதா? எந்த அனுமதியுடன் இயங்குகின்ற பாதை? இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை அறிவிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...