Entebbe Airport scaled
செய்திகள்உலகம்

இன்று உகண்டா நாளை லங்கா?

Share

சீனாவின் பிடிக்குள் உகண்டா சிக்கி தனது விமானநிலையத்தை இழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உகண்டா சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் உகண்டாவின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உகண்டாவினால் என்டெப்பே விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்க்காக சீனாவிடம் இக் கடன் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவிற்கு, 2015 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி சுமார் 207 மில்லியன் டொலரை இரண்டு சதவீத வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியிருந்தது.

தற்போது கடனை திருப்பி செலுத்தும் காலம் முடிவடைந்த நிலையில் உகண்டா தனது கடனைத் திருப்பச் செலுத்த முடியாமல் போனால், என்டெப்பெ விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தக் கடன் ஒப்பந்தத்தின் ஒருபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனி, தனது உயர்மட்ட குழுவினரைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளார்.

ஒப்பந்தத்தில் உள்ள இப்பகுதியை நீக்கக் கோரி இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள போதிலும், சீனா தமது ஒப்பந்த விதிகளைத் தளர்த்த முடியாது என மறுத்துள்ளது.

இதனால் , உகண்டா தனது ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் பறிகொடுத்துள்ளது.

மேலும் இந்தக் கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகண்டா கோர முடியாத இக்கட்டான நிலைக்கு உகாண்ட தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, உகண்டா விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்துவதாக வெளியான தகவலை உகண்டாவின் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இவ்வாறு பல வளர்ந்து வரும் நாடுகளுக்கு தனது கடன்களை கொடுத்து பல இடங்களை கையகப்படுத்தியுள்ளது.

இன்னும் எத்தனை நாடுகள் சீனாவின் பிடிக்குள் சிக்கப்போகின்றதோ தெரியவில்லை.

இன்று உகண்டா நாளை லங்கா………..?

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...