acci
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் கட்டடத்துடன் மோதியது – (வீடியோ)

Share

இன்று காலை கண்டி வீதி – கொடிகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

கொடிகாமம் சந்தியைக் கடக்க முயன்ற டிப்பர் வாகனம், வெக்க கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சந்தைக்கு கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இருப்பினும் கட்டடத்துடன் மோதிய டிப்பர் வாகனத்தின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.

கொடிகாமம் சந்தியில் ஒளிச் சமிஞை விளக்கு நேர எல்லை முடிவடைய இருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக வந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் வேவமாக சந்தியை கடக்க முயற்சித்த நிலையில் நேரம் முடிவடைந்தது.

இந்நிலையில், முன்னே பயணித்த டிப்பர் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது.

அந்த வாகனத்துக்கு பின்னே வேகமாக வந்த மற்றைய டிப்பர் வாகனம் நிறுத்த முற்பட்ட நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்து கொடிகாமம் சந்தை கட்டடத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

accccc accc acc

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...