image 198c08bba6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதுக்குடியிருப்பில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து! – இருவர் பலி – ஒருவர் படுகாயம்

Share

டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர், எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் மோதிய நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

டிப்பர் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிலக்குடியிருப்பு கேப்பாபிலவை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது -48), அதே இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது-17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்த இளைஞன் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது-22) என தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து டிப்பர் வாகனத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்காது அவ்விடத்தில் மக்கள் கூடியமையால் அவ்விடத்தில் பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image 405a87e8d2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...