image f38ce8fd80
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நோர்வூட் – மஸ்கெலியா வீதியில் கோர விபத்து: 20 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; இருவர் காயம்!

Share

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, இன்று (11) மாலை 4 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதிலிருந்த மற்றொருவர் என இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதிக வேகம் அல்லது வீதியின் வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...