sementhu
செய்திகள்அரசியல்இலங்கை

சிமெந்துத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் இதுதான்!-

Share

சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சிமெந்து இறக்குமதியில் இருந்து நிறுவனங்கள் பின்வாங்குகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிமெந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாதாந்தம் கூடுதலாக 10,000 மெற்றிக் தொன் சிமெந்தை இறக்குமதி செய்ய முடிந்தால் இந்நிலைமையைத் தவிர்க்க முடியும் எனவும் சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் சிமெந்துத் தேவையில் 60 வீதம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 40 வீதம் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் சிமெந்து உற்பத்தி மாதமொன்றுக்கு 150,000 மெற்றிக் தொன்னை தாண்டுவதாகக் கூறிய அவர், பாரிய அளவிலான கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிமெந்தை பதுக்குவதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் மூலம் 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூடை ஒன்றின் விலையை அரசாங்கம் அண்மையில் 93 ரூபாவினால் உயர்த்திய போதிலும், தற்போது கடுமையான சிமெந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...