VACCINE
செய்திகள்உலகம்

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் மூன்றாவது டோஸ்!

Share
  • 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் மூன்றாவது டோஸ்
  • இரண்டாம் ஊசி ஏற்றி 5 மாதங்கள் தாண்டிய பின்னரே அடுத்த”டோஸ்”
  • முன்பதிவு இணையத்தில் ஆரம்பம்

வைரஸின் ஐந்தாவது தொற்றலையை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது ஊக்கித் தடுப்பூசி (vaccine booster) ஏற்றும் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படுகிறது. பொது இடங்களில் குறிப்பாக நத்தார் சந்தைகளில் மாஸ்க் அணிவது அவசியம் என்றும், சுகாதாரப் பாஸ் பயன்படுத்தும் இடங்களிலும் இனிமேல் மாஸ்க்அணிந்திருப்பது கட்டாயம் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பி.சி.ஆர். வைரஸ் சோதனைச் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் இனி மேல் 24 மணித்தியாலங்கள் ஆகும். தடுப்பூசி ஏற்றி சுகாதாரப் பாஸ் பெற்றுக்கொள்ளாதவர்கள் இனி தங்கள் தேவைகளுக்குத் தினமும் பி.சி.ஆர். சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். தற்சமயம் பி.சி.ஆர். சான்றிதழ்களின் பயன்பாட்டுக் காலம் 72 மணித்தியாலங்கள் ஆகும்.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றி ஐந்து மாதங்கள் நிறைவடைந்தவர்கள் உடனடியாகவே மூன்றாவது டோஸ் ஏற்ற முடியும். அதற்காக இணையத் தளங்களில் இப்போதே முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுவரை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே மூன்றாவது ஊசி ஏற்றப்பட்டு வந்தது.

france 1

65 வயதுக்கு மேற்பட்டோருக்கு டிசெம்பர் 15 ஆம் திகதி முதலும், ஏனையோருக்கு ஜனவரி 15 ஆம் திகதி தொடக்கமும் மூன்றாவது ஊசி சுகாதாரப் பாஸில் இணைத்துக் கொள்ளப்படும். இரண்டாவது ஊசி ஏற்றி ஏழு மாதங்களுக்குள் மூன்றாவது டோஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் அத்தகையோரது சுகாதாரப் பாஸ் செயலிழக்கும்.

இதேவேளை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் – முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஐந்து மாதங்களின் பின்னர் – மூன்றாவது டோஸ் செலுத்துவதற்கு நாட்டின் பொதுச் சுகாதார அதிகார சபையும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த வாரம் அது வெளியிட்ட ஆலோசனையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மூன்றாவது ஊசியைப் பரிந்துரைத்திருந்தது. நேற்று அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையே அமைச்சர் இன்றைய தினம் செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

“பொது முடக்கம், ஊரடங்கு, போக்குவரத்துக் கட்டுப்பாடு, கடைகளை மூடுதல் போன்ற அறிவிப்புகள் எதனையும் நான் இன்று விடுக்கப்போவதில்லை” – என்று அவர் கூட்டத்தின் தொடக்கத்தில் கூறினார்.

ஐந்தாவது அலை முந்தியவற்றை விட மிக வீரியமாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், தற்போதைய குளிர் காலம் வைரஸ் திரிபுகளின் வேகமான பரவலுக்கு வாய்ப்பாகவுள்ளது என்பதை குறிப்பிட்டார். முந்திய தொற்றலைகளை கையாண்ட அனுபவங்களையும் தடுப்பூசி ஆயுதத்தையும் பயன்படுத்தி இந்தப் புதிய அலையையும் வெல்வோம் என்றார் அவர்.

அனைவருக்கும் மூன்றாவது டோஸ் வழங்கத் தேவையான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...