Sritharan 1
செய்திகள்அரசியல்இலங்கை

பொது அறிவு இல்லாவிட்டாலும் பொதுவான அறிவாவது இருக்க வேண்டும்! – சிறீதரன் எம்.பி பதிலடி

Share

“பொது அறிவு தான் இல்லாவிட்டாலும், பொதுவான அறிவாவது இருக்க வேண்டும் ” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பேச்சு தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

மேலும், கௌரவ சாணக்கியனின் பெயரை பிழையான முறையில் சித்தரித்து பேச முற்படும் குறித்த தகுதியற்ற கீழ்த்தரமான பாராளுமன்ற உறுப்பினரால் பாராளுமன்றத்தின் கௌரவமும் மரியாதையும் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

சபையில் இல்லாத ஒரு கௌரவ உறுப்பினரின் பெயரை சுட்டிக்காட்டி போலிக்குற்றச்சாட்டை முன்வைப்பதும் ஒரு அறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் செயல் இல்லை என்பதையும், இவர்களின் தரத்தையும் தகுதியையும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சாணக்கியனை ‘முகமது சாணக்கியன்’ என தெரிவித்ததுடன் அவர் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பதில் வழங்க முற்படும் போடும் சுமந்திரன் மற்றும் சிறீதரன் தொடர்பில் மிக அநாகரிகமான முறையில் திலீபன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...