சசிகலா
அரசியல்இந்தியாசெய்திகள்

சசிகலாவுக்கு அ.தி.மு.க வில் இனி இடமில்லையாம்!

Share

சசிகலா மீண்டும் அ.தி.மு.கவில் சேர்க்கப்படமாட்டார் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:- சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?

பதில்:- அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தலைமைக் கழகமும் இணைந்து அவரைக் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை நானும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்து அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அதற்கு வாய்ப்பில்லை. யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது.

கே:- சசிகலா குறித்து ஓ.பி.எஸ். கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப:- அரசியல் வேறு. தனிப்பட்ட முறை என்பது வேறு. சசிகலாவுடன் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. அதனடிப்படையில் ஓ.பி.எஸ். பேசியுள்ளார். இப்போது ஸ்டாலினுடன் எங்களுக்கு அரசியல் ரீதியாகவே பிரச்சினை உள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.கவில் எந்தக் குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்துத்தான் – என்றார் .

#indianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...