b1874651 9aa92aa5 52913258 ranil
செய்திகள்இலங்கை

பொருள் இறக்குமதிக்கு பணம் இல்லை! – ரணில்

Share

நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. பொருள்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் பணம் இல்லை

இவ்வாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிமரசிங்க தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற உரையாடலின்போதேபோதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவசரகால சட்டத்தின் கீழ், அரசாங்கம் மக்களை அடக்கும் சரத்துக்களை கொண்டு வருமாக இருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட தாம் தயார்.

அத்தியாவசிய பொருள்களை விநியோகிக்க அவசரகால சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.

ஆனால், இந்த அவசரகால சட்டத்தின் கீழ் மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

நாட்டில், அரிசி தவிர்ந்த ஏனைய அனைத்து பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் பொருள்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் தற்போது பணம் கிடையாது – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...