Arrested 611631070
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காங்கேசன்துறையில் விக்கிரகங்கள் திருட்டு! – இராணுவ சிப்பாய் கைது

Share

இந்து கோவில்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உயர் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் இந்து ஆலயங்களில் காணப்பட்ட இந்து ஆலயங்களிலே விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதி இந்து கோவில்களில் உள்ள விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன. அத்துடன் திருடப்பட்ட விக்கிரகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ஒருவரை (வயது-34) முதலில் கைது செய்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கொழும்புக்கு விரைந்த உப பொலிஸ் குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20க்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர். அந்த விக்கிரகங்களை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட விக்கிரகங்களில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் காணப்படும் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இராணுவச் சிப்பாய் ஒருவர் (வயது-42) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 10
இலங்கைசெய்திகள்

நீர் கட்டண உயர்வு இல்லை: ஜூன் மாதம் கட்டணத் திருத்தம் – அமைச்சர் சுசில் ரணசிங்க!

தற்போதைய சூழலில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும்...

08 10
செய்திகள்இலங்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின்...

06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...

05 11
செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு: 12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990 ஆக அதிகரிப்பு!

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, மார்ச் 10, 2026 நள்ளிரவு...