Arrested 611631070
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காங்கேசன்துறையில் விக்கிரகங்கள் திருட்டு! – இராணுவ சிப்பாய் கைது

Share

இந்து கோவில்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உயர் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் இந்து ஆலயங்களில் காணப்பட்ட இந்து ஆலயங்களிலே விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதி இந்து கோவில்களில் உள்ள விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன. அத்துடன் திருடப்பட்ட விக்கிரகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ஒருவரை (வயது-34) முதலில் கைது செய்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கொழும்புக்கு விரைந்த உப பொலிஸ் குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20க்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர். அந்த விக்கிரகங்களை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட விக்கிரகங்களில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் காணப்படும் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இராணுவச் சிப்பாய் ஒருவர் (வயது-42) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...