jaffna
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் வயோதிபப்பெண்ணை ஏமாற்றிவிட்டு 1000 ரூபாவுடன் இளைஞர் தப்பியோட்டம்!

Share

மண்ணெண்ணெய் வாங்கித் தருவதாகக் கூறி வயோதிபப் பெண்ணிடம் ஆயிரம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

யாழ். நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வயோதிபப் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார்.

இந்நிலையில், அங்கு வந்த இளைஞர் ஒருவர், “வரிசையில் நிற்க வேண்டாம். உடனடியாக மண்ணெண்ணெய் வாங்கி தருகின்றேன்” என்று கூறி வயோதிபப் பெண்ணிடம் 1000 ரூபா பணத்தையும், போத்தலையும் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றவர்கள் ஊடாக நழுவித் தப்பியோடியுள்ளார்.

நீண்டநேரமாக மண்ணெண்ணெய்க்காகக் காத்திருந்த வ்யோதிபப் பெண், தான் காசு கொடுத்த இளைஞரைக் காணாது, ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறிவிட்டு வீடு திரும்பினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...