இந்தியாசெய்திகள்

மனைவியைக் கொன்று தானும் உயிரை விட்ட கணவரின் சோகக் கதை

Share
suicide 1
Share

உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி. இவரது மனைவி லீலாம்மா (75), இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் திருமணமாகி வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக மனைவி உடல் நலம் குன்றிய நிலையில் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் கணவன் தான் கவனித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தால் மனைவியை சரிவர கவனிக்க ஜோசப்பால் முடியவில்லை.

நேற்று வீட்டுச் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஜோசப் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த பொலிஸார் ஜோசப் உடலை கைப்பற்றிய நிலையில் ஜோசப் மனைவி லீலாம்மா ஒரு அறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

மனைவியைக் கொலை செய்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், என ஜோசப் எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதனை ஆதாரமாக வைத்து இரு உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...