gott
செய்திகள்இலங்கை

தமிழ் மொழியை புறக்கணித்த ஜனாதிபதி!

Share

நாட்டின் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மொழிக் கொள்கையை சமமாக பின்பற்ற வேண்டும்.

இதன் மூலமே நாட்டில் சமத்துவத்தைப் பேண முடியும். வெறும் வாய்வார்த்தை மூலம் வாக்குறுதிகளை வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை.

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு அனுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் ததலைமையகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.

இந்த விளையாட்டரங்கின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி உள்ளடக்கப்படவில்லை.

இதில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே விளையாட்டரங்கின் பெயர் மற்றும் ஏனைய விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து தேசிய மொழிகள் தொடர்பான முன்னாள் அமைச்சர் தனது அதிருப்தியை தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...