Death 1
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

குடும்பஸ்தரின் மரணத்திற்கு பொலிஸாரே காரணம்: பொலிஸ் நிலையத்தை சூழ்ந்த மக்கள்

Share

இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய, பனாமுர பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

பனாமுர பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 38 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை, அடிப்படையாகக்கொண்டு நீதிகோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாரின் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொது மக்கள், சுயாதீன விசாரணையை கோருகின்றனர்.

குடும்ப தகராறு தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் 38 வயதான குறித்த நபர் நேற்றிரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை காலை 3.30 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் மரணத்துக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ரயர்களும் கொளுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனே, பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இந்த குற்றச்சாட்டை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துள்ளார். சிறைக் கூண்டுக்குள் உள்ள கம்பியில் தொங்கி அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...