vinayakar 567
செய்திகள்இலங்கை

மரத்தடியில் சுயம்பு பிள்ளையார் – படையெடுக்கும் மக்கள்!

Share

பதுளை ஹாலிஎல அந்துட்டுவாவெல பாதையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குயின்ஸ்டவுன் தோட்டத்தின் அருகிலுள்ள பாடசாலைக்கருகில் உள்ள மரம் ஒன்றில் சுயம்பாக பிள்ளையார் வடிவம் தோன்றியுள்ளது.

இந்த மரவேரில் தோன்றியுள்ள பிள்ளையாரை வழிபட சிங்கள மக்களும் வெளியிடங்களிலிருந்து வரும் பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

vinayakar

pillaiyar

vinayakar 567 1

இந்த மரம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அழகுக்காக வளர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து  கொண்டுவரப்பட்டது  எனத் தெரிவிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று சுயம்பாக தோன்றிய பிள்ளையாரின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்வூர் மக்களால் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிள்ளையாரை பூமரத்து பிள்ளையார் என பெயர்சூட்டி ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். தற்போது இருவேளைகள் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 40 வருட காலமாக  இது போன்ற அதிசயத்தை வாழ்நாளில் கண்ட முதல் தடவை இது எனவும்,  இம் மரத்தைச் சுற்றியுள்ள பல வேர்ப்பகுதிகளில் யானையின் தலைப்பகுதி தும்பிக்கை போன்ற வடிவங்கள் அமையப்பெற்று காட்சியளிக்கிறது எனவும், இது ஒரு கலியுக அற்புதம் எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...