vinayakar 567
செய்திகள்இலங்கை

மரத்தடியில் சுயம்பு பிள்ளையார் – படையெடுக்கும் மக்கள்!

Share

பதுளை ஹாலிஎல அந்துட்டுவாவெல பாதையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குயின்ஸ்டவுன் தோட்டத்தின் அருகிலுள்ள பாடசாலைக்கருகில் உள்ள மரம் ஒன்றில் சுயம்பாக பிள்ளையார் வடிவம் தோன்றியுள்ளது.

இந்த மரவேரில் தோன்றியுள்ள பிள்ளையாரை வழிபட சிங்கள மக்களும் வெளியிடங்களிலிருந்து வரும் பக்தர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

vinayakar

pillaiyar

vinayakar 567 1

இந்த மரம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் அழகுக்காக வளர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து  கொண்டுவரப்பட்டது  எனத் தெரிவிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று சுயம்பாக தோன்றிய பிள்ளையாரின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்வூர் மக்களால் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிள்ளையாரை பூமரத்து பிள்ளையார் என பெயர்சூட்டி ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். தற்போது இருவேளைகள் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 40 வருட காலமாக  இது போன்ற அதிசயத்தை வாழ்நாளில் கண்ட முதல் தடவை இது எனவும்,  இம் மரத்தைச் சுற்றியுள்ள பல வேர்ப்பகுதிகளில் யானையின் தலைப்பகுதி தும்பிக்கை போன்ற வடிவங்கள் அமையப்பெற்று காட்சியளிக்கிறது எனவும், இது ஒரு கலியுக அற்புதம் எனவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...