Married
செய்திகள்இந்தியா

65 வயதில் காதலியைக் கரம்பிடித்த முதியவர்: 35 ஆண்டுகளிற்குப் பின் சக்ஸஸ் ஆனது காதல்

Share

கர்நாடகாவில் இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்யாமல் இருந்த முதியவர், கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயதில் தனது காதலியைக் கரம்பிடித்துள்ளார்.

மைசூர் நகரிலுள்ள ஹெப்பாலா பகுதியைச் சேர்ந்த 65 வயதான சிக்கண்ணா என்பவரும் ஜெயம்மா என்பவரும் இளமைக் காலத்தில் தலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரிலும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜெயம்மா, வீட்டில் பார்த்த வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு சென்றுள்ளார்.

ஆனால், ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மாவை விட்டுபிரிந்து சென்றுவிட்டார்.

Married 01

காதலி தன்னை விட்டு பிரிந்த விரக்தியில் பிறந்த ஊரை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் வசித்து வந்த சிக்கண்ணாவுக்கு, சமீபத்தில் தான் ஜெயம்மா தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம் மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

காதலிக்காக 35 வருடம் காத்திருந்த இவரது காதல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...