Nobel Peace
செய்திகள்உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை இருவருக்கு?

Share

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான அடிப்படையாக இருப்பதை வலியுறுத்தியமைக்காகவே, குறித்த இரு பத்திரிகையாளர்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி போன்ற விடயப் பரப்புக்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் வருடத்திற்கானமருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர் என்பதுடன், நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான திமித்ரி மொரொட்டா பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...