Nobel Peace
செய்திகள்உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை இருவருக்கு?

Share

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான அடிப்படையாக இருப்பதை வலியுறுத்தியமைக்காகவே, குறித்த இரு பத்திரிகையாளர்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி போன்ற விடயப் பரப்புக்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் வருடத்திற்கானமருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர் என்பதுடன், நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான திமித்ரி மொரொட்டா பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...