Nobel Peace
செய்திகள்உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை இருவருக்கு?

Share

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான அடிப்படையாக இருப்பதை வலியுறுத்தியமைக்காகவே, குறித்த இரு பத்திரிகையாளர்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி போன்ற விடயப் பரப்புக்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் வருடத்திற்கானமருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர் என்பதுடன், நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான திமித்ரி மொரொட்டா பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...