Nobel Peace
செய்திகள்உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு இம்முறை இருவருக்கு?

Share

இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடிய இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்குமே இவ்வாறு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் ஜனநாயகத்துக்கான அடிப்படையாக இருப்பதை வலியுறுத்தியமைக்காகவே, குறித்த இரு பத்திரிகையாளர்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி போன்ற விடயப் பரப்புக்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வருடத்தின் நோபல் பரிசுகள் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் வருடத்திற்கானமருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர் என்பதுடன், நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான திமித்ரி மொரொட்டா பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...