sri lankan par
செய்திகள்அரசியல்இலங்கை

பிரேரணை தோற்கடிக்கப்படுவது உறுதி! – ஆளுங்கட்சி சவால்

Share

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்பதற்கு தயார் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

உரத் தட்டுப்பாட்டு விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.

இவ்வாரம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இதற்காக எதிரணி உறுப்பினர்களிடம் கையொப்பம் திரட்டப்படலாம். அதன்பிறகு நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.

இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பில் அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் வினவியபோது,

” விவசாயிகளுக்காக அல்ல அரசியல் செய்வதற்காகவே எதிரணி இவ்வாறு செயற்படுகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால்கூட அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம்.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...