LakshmanKiriella
செய்திகள்அரசியல்இலங்கை

பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை! – லக்‌ஷ்மன் கிரியல்ல குற்றச்சாட்டு

Share

” நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கின்றது. ஆனாலும், அதிஉயர் சபைக்கு பொறுப்புகூறும் விதத்தில் நிதி அமைச்சர் செயற்படுவதில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியாதுள்ளது.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் நிலைவரம் தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இரு நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது. எனவே, அதற்கான திகதி கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.

உண்மையாலுமே நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருகக்கின்றது. எனினும், நாட்டின் நிதி நிலைவரம் தொடர்பில் நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு எதனையும் தெரியப்படுத்துவதில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது எமக்கும் தெரியாமல் உள்ளது.

அரசால் தற்போது முன்வைக்கப்பட்டுவரும் தர்க்கங்கள் போலியானவை என்பதை அமைச்சர் கம்மன்பிலவின் கூற்று உறுதிப்படுத்தியது. இந்த நெருக்கடி நிலைமைக்கு கொரோனா பெருந்தொற்று காரணமல்ல என்பதை அவர் விபரித்திருந்தார். உண்மை நிலைவரத்தை நிதி அமைச்சர் தெளிவுபடுத்துவதில்லை.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...