mahinda 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தை பாதுகாக்க ஊடகங்களால் முடியாது – பிரதமர்

Share

அரசாங்கம் ஒன்றை ஊடகங்களால் உருவாக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க இயலாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் அதனை அதிகாரத்தில் அமர்த்தவுமே ஊடகங்களால் முடியும். ஆனால் அவ் அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள ஆளும் கட்சியினால் மட்டுமே இயலும் என அவர் தெரிவித்தார்.

அராசாங்கத்தை ஊடகங்கள் பாதுகாக்க எண்ணினால் அதற்கு பாரியளவு காப்புறுதி தொகை வழங்க நேரிடும். ஊடகங்கள் இவ்விடயத்தை புரிந்து கொண்ட போதிலும் எம்மவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் உரையாற்றிய பிரதமர்,

தொழில் ரீதியாக நான் அதிகம் ஊடகவியலாளர்களுடன் பழகியுள்ளேன். ஊடகங்களுக்கு மறைக்கப்படுகின்ற விடயங்களை அறிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

இன்று நாடாளுமன்ற விவாதங்கள் திறந்த நிலையில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. ஆனால் யாரும் அதனை பார்ப்பதில்லை.

ஊடகவியலாளர்கள் அமைச்சரவை கூட்டங்களுக்கு மாத்திரமே செல்வதில்லை. அதனால் அமைச்சரவை சார்ந்து பலவேறு கதைகள் கூறப்படுகின்றன.

நாம் ஆட்சி பீடம் ஏறுவதற்கும், எமது நெருக்கடியான சூழலிலும் ஊடகங்கள் எம்முடன் இருந்தன. ஆனால் இன்று இல்லை என திட்டுகின்றோம். ஊடகங்களுக்கு தெரியாமலேயே ஊடகங்களை நாட்டுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்தி கொள்வதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...