mahinda 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தை பாதுகாக்க ஊடகங்களால் முடியாது – பிரதமர்

Share

அரசாங்கம் ஒன்றை ஊடகங்களால் உருவாக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க இயலாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் அதனை அதிகாரத்தில் அமர்த்தவுமே ஊடகங்களால் முடியும். ஆனால் அவ் அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள ஆளும் கட்சியினால் மட்டுமே இயலும் என அவர் தெரிவித்தார்.

அராசாங்கத்தை ஊடகங்கள் பாதுகாக்க எண்ணினால் அதற்கு பாரியளவு காப்புறுதி தொகை வழங்க நேரிடும். ஊடகங்கள் இவ்விடயத்தை புரிந்து கொண்ட போதிலும் எம்மவர்கள் புரிந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் உரையாற்றிய பிரதமர்,

தொழில் ரீதியாக நான் அதிகம் ஊடகவியலாளர்களுடன் பழகியுள்ளேன். ஊடகங்களுக்கு மறைக்கப்படுகின்ற விடயங்களை அறிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.

இன்று நாடாளுமன்ற விவாதங்கள் திறந்த நிலையில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. ஆனால் யாரும் அதனை பார்ப்பதில்லை.

ஊடகவியலாளர்கள் அமைச்சரவை கூட்டங்களுக்கு மாத்திரமே செல்வதில்லை. அதனால் அமைச்சரவை சார்ந்து பலவேறு கதைகள் கூறப்படுகின்றன.

நாம் ஆட்சி பீடம் ஏறுவதற்கும், எமது நெருக்கடியான சூழலிலும் ஊடகங்கள் எம்முடன் இருந்தன. ஆனால் இன்று இல்லை என திட்டுகின்றோம். ஊடகங்களுக்கு தெரியாமலேயே ஊடகங்களை நாட்டுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்தி கொள்வதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...