Maithripala Sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

அரசின் பெரும்பான்மை சு.க கைகளிலேயே! – மைத்திரிபால சிறிசேன

Share

இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பதிலடி கொடுத்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

” தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைத்துவிட்டு, அதன் பிறகு அரசுக்குள் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் என்ன நடக்கும் என்ற பாடத்தை வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருக்கலாம். அதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் அங்கம் வகிக்கின்றனர். எனவே, எம்மால்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்படுகின்றது.

கூட்டணி ஒற்றுமையை காத்து, நட்புடன் நகரவே நாம் விரும்புகின்றோம். எம்மை தாக்க முற்பட்டால், அவர்களின் வழியில் அல்லாமல் வேறு வழியில் பதிலடி கொடுக்க நாமும் தயார்.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...