Rishad
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கர தடை சட்டத்தினால் கேள்விக்குறியாகும் தமிழ் இளைஞர்களின் வாழ்வு!

Share

தசாப்த காலமாக பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த இவர்,

சுமார் 12,000 பேர் யுத்த முடிவின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் சிற்சில காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பலர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலே இன்னும் சிறையில் வாடுகின்றனர். அவர்களின் விடுதலை தொடர்பில் கவனம் எடுக்குமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் பேசிய அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை கட்டம் கட்டமாக முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

‘புலிகளின் மீளெழுச்சியில் தொடர்புபட்டார்கள்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு கடந்த இரு வருடங்களாக 40 அல்லது 50 இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...