haibatullah akhundzada
செய்திகள்உலகம்

வரலாற்றில் முதன்முதலாக தோன்றிய தலிபான்களின் தலைவர்

Share

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்முறையாக தலிபான் அமைப்பின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, மக்கள் முன் தோன்றி ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார்

தலிபான் அமைப்பின் அதிஉச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார்.

இதன் காரணமாக இறந்துவிட்டதாகக் கூட கூறப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமையன்று, ராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக அகுந்த்ஸடா தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு சென்றதாக தலிபான் அலுவலர்கள் தெரிவித்தனர்.

அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புகைப்படமோ விடியோவோ எடுக்கப்படவில்லை. ஆனால், அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட வீடியோவில் தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அமீருல் மொமினீன் என்றழைக்கப்படும் அகுந்த்ஸடா, அங்கு மதம் தொடர்பாகவே பேசியுள்ளார்.

அரசியல் குறித்து அவர் பேசவில்லை ஆனால் போரில் உயிரிழந்த, படுகாயம் அடைந்த தலிபான்களுக்காக அகுந்த்ஸடா பிரார்த்தனையில் ஈடுபட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு, அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்போது தலைவராக இருந்த முல்லா அக்கர் மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து அகுந்த்ஸடா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...