WhatsApp Image 2021 12 10 at 2.01.31 AM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் என கூறி ஹயஸ் வாகனத்தை திருடிய கில்லாடிகள்!!!

Share

பொலிஸ் என கூறி கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் சேவீசிற்காக விடப்பட்ட ஹயஸ் ரக வாகனத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் ஒருவர் அறிவியல்நகரிற்கும் இரணைமடுச் சந்திக்கும் இடையில் உள்ள சேவீஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி வான் ஒன்நை சேவீஸ் செய்வதற்காக கொடுத்துள்ளார்.

பின்பு தனது இரண்டாவது வாகனம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் பணிக்காக சென்றார். இதனால் நேரம் தாமதமானதால் சேவீஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

மறுநாள் சென்று வாகனத்தை எடுக்க எண்ணியவரிற்கு மறுநாளான 30 ஆம் திகதி சேவீஸ் நிலைய உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வாகனத்தை யாரோ இருவர் வந்து எடுத்துச் சென்று விட்டனர் என பதிலளித்திருந்தார்.

இதன் காரணமாக வாகன உரிமையாளர் நேரில் சென்று என்னை தொடர்பு கொண்டு கேட்காது எவ்வாறு ஒப்படைப்பீர்கள் என சேவீஸ் நிலையத்தில் வினாவியதோடு அங்கே இருந்த சீ.சீ.ரி கமராவை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது வாகனத்தை எடுத்துச் சென்றவர் சேவீஸ் நிலையத்தினருடன் தாம் பொலிசார் எனக் கூறியே வாகனத்தை எடுத்துச் சென்றதாக சேவீஸ் நிலையத்தினர் தெரிவித்திருந்தனர்.

இவை தொடர்பில் வாகன உரிமையாளர் மாங்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் பெயரில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேறகோண்டு வந்தனர்.

இருந்தபோதும் உரிமையாளரும் பல முயற்சிகளை மேற்கொண்டு 9 நாட்களின் பின்பு சாவகச்சேரி கல்வயலில் உள்ள வேதவனப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய ஓர் வீட்டில் மறைத்து வைத்திருந்த சமயம் ஹயஸ் வாகனத்தை உரிமையாளர் மீட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

இதேநேரம் வாகன உரிமையாளரின் பகைவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவரே ஆள் வைத்து வாகனத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...