WhatsApp Image 2021 12 10 at 2.01.31 AM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் என கூறி ஹயஸ் வாகனத்தை திருடிய கில்லாடிகள்!!!

Share

பொலிஸ் என கூறி கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் சேவீசிற்காக விடப்பட்ட ஹயஸ் ரக வாகனத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் ஒருவர் அறிவியல்நகரிற்கும் இரணைமடுச் சந்திக்கும் இடையில் உள்ள சேவீஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி வான் ஒன்நை சேவீஸ் செய்வதற்காக கொடுத்துள்ளார்.

பின்பு தனது இரண்டாவது வாகனம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் பணிக்காக சென்றார். இதனால் நேரம் தாமதமானதால் சேவீஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

மறுநாள் சென்று வாகனத்தை எடுக்க எண்ணியவரிற்கு மறுநாளான 30 ஆம் திகதி சேவீஸ் நிலைய உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வாகனத்தை யாரோ இருவர் வந்து எடுத்துச் சென்று விட்டனர் என பதிலளித்திருந்தார்.

இதன் காரணமாக வாகன உரிமையாளர் நேரில் சென்று என்னை தொடர்பு கொண்டு கேட்காது எவ்வாறு ஒப்படைப்பீர்கள் என சேவீஸ் நிலையத்தில் வினாவியதோடு அங்கே இருந்த சீ.சீ.ரி கமராவை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது வாகனத்தை எடுத்துச் சென்றவர் சேவீஸ் நிலையத்தினருடன் தாம் பொலிசார் எனக் கூறியே வாகனத்தை எடுத்துச் சென்றதாக சேவீஸ் நிலையத்தினர் தெரிவித்திருந்தனர்.

இவை தொடர்பில் வாகன உரிமையாளர் மாங்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் பெயரில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேறகோண்டு வந்தனர்.

இருந்தபோதும் உரிமையாளரும் பல முயற்சிகளை மேற்கொண்டு 9 நாட்களின் பின்பு சாவகச்சேரி கல்வயலில் உள்ள வேதவனப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய ஓர் வீட்டில் மறைத்து வைத்திருந்த சமயம் ஹயஸ் வாகனத்தை உரிமையாளர் மீட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

இதேநேரம் வாகன உரிமையாளரின் பகைவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவரே ஆள் வைத்து வாகனத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...