WhatsApp Image 2021 12 10 at 2.01.31 AM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிஸ் என கூறி ஹயஸ் வாகனத்தை திருடிய கில்லாடிகள்!!!

Share

பொலிஸ் என கூறி கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் சேவீசிற்காக விடப்பட்ட ஹயஸ் ரக வாகனத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் ஒருவர் அறிவியல்நகரிற்கும் இரணைமடுச் சந்திக்கும் இடையில் உள்ள சேவீஸ் நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி வான் ஒன்நை சேவீஸ் செய்வதற்காக கொடுத்துள்ளார்.

பின்பு தனது இரண்டாவது வாகனம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் பணிக்காக சென்றார். இதனால் நேரம் தாமதமானதால் சேவீஸ் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

மறுநாள் சென்று வாகனத்தை எடுக்க எண்ணியவரிற்கு மறுநாளான 30 ஆம் திகதி சேவீஸ் நிலைய உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வாகனத்தை யாரோ இருவர் வந்து எடுத்துச் சென்று விட்டனர் என பதிலளித்திருந்தார்.

இதன் காரணமாக வாகன உரிமையாளர் நேரில் சென்று என்னை தொடர்பு கொண்டு கேட்காது எவ்வாறு ஒப்படைப்பீர்கள் என சேவீஸ் நிலையத்தில் வினாவியதோடு அங்கே இருந்த சீ.சீ.ரி கமராவை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது வாகனத்தை எடுத்துச் சென்றவர் சேவீஸ் நிலையத்தினருடன் தாம் பொலிசார் எனக் கூறியே வாகனத்தை எடுத்துச் சென்றதாக சேவீஸ் நிலையத்தினர் தெரிவித்திருந்தனர்.

இவை தொடர்பில் வாகன உரிமையாளர் மாங்குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் பெயரில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேறகோண்டு வந்தனர்.

இருந்தபோதும் உரிமையாளரும் பல முயற்சிகளை மேற்கொண்டு 9 நாட்களின் பின்பு சாவகச்சேரி கல்வயலில் உள்ள வேதவனப் பிள்ளையார் ஆலயத்தை அண்டிய ஓர் வீட்டில் மறைத்து வைத்திருந்த சமயம் ஹயஸ் வாகனத்தை உரிமையாளர் மீட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

இதேநேரம் வாகன உரிமையாளரின் பகைவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவரே ஆள் வைத்து வாகனத்தை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...