20200829 190711
செய்திகள்இலங்கை

வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம்

Share

வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம்

இலங்கையின் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பலர் மறைமுகமாக செயற்படுகிறார்கள் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் சிறப்பாக செயற்படுகின்றனர்..ஆனால் வெளிநாட்டில் இருந்து பல நபர்கள் தமக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக நீதிமன்றங்களின் சுயாதீனதன்மைக்கு பங்கம் விளைவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை மக்கள் நம்புகின்றனர். இதனால் நீதிபதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு நீதிமன்றத்தின் சுயாதீனதன்மை தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உள் நாட்டிலும் இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் உள்ளன. ஆனாலும் பெருபாலான நபர்கள் வெளிநாட்டில் மறைந்து இருந்து செயற்படுகின்ற காரணத்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.

இவ்வாறான சிலரின் பொய்யான பிரச்சாரங்களால் அனைவருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....