20200829 190711
செய்திகள்இலங்கை

வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம்

Share

வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம்

இலங்கையின் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பலர் மறைமுகமாக செயற்படுகிறார்கள் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் சிறப்பாக செயற்படுகின்றனர்..ஆனால் வெளிநாட்டில் இருந்து பல நபர்கள் தமக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக நீதிமன்றங்களின் சுயாதீனதன்மைக்கு பங்கம் விளைவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை மக்கள் நம்புகின்றனர். இதனால் நீதிபதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு நீதிமன்றத்தின் சுயாதீனதன்மை தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உள் நாட்டிலும் இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் உள்ளன. ஆனாலும் பெருபாலான நபர்கள் வெளிநாட்டில் மறைந்து இருந்து செயற்படுகின்ற காரணத்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.

இவ்வாறான சிலரின் பொய்யான பிரச்சாரங்களால் அனைவருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...