மனைவியைக் கொலைசெய்துவிட்டு தானும் உயிரை மாய்த்த கணவர்!

1 5

சிலாபம் – தங்வெல பகுதியில் மனைவியின் தலையை வெட்டிக் கொலை செய்து விட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (13) காலை கொஸ்வத்த பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவர்கள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 60 வயதானவர் என்பதுடன், உயிரை மாய்த்துக்கொண்ட ஆண் 65 வயதானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version