இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இந்த, மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடிமடி வலை’  முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது.

இதனால், கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட 9 மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 

Exit mobile version