dilum amunugama
செய்திகள்அரசியல்இலங்கை

அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களே சுதந்திரக்கட்சியினர்! – சாடுகிறார் திலும் அமுனுகம

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டு பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் , வெளியேற்றுவதற்கு முன்னர் வெளியேறுவதே நல்லது.

இந்த அரசின் வெற்றியின் பிரதான பங்காளி சுதந்திரக்கட்சி அல்ல. அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களே அங்குள்ளனர். எந்நேரத்தில் வேண்டுமானாலும் அக்கட்சியினர் துரோகம் இழைக்கலாம். எனவே, பாய்ந்து செல்வதற்கு முன்னர் வெளியேற்றுவதே நல்லது.” – என்றார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவர் பின்னாலும் செல்லாது, சுதந்திரக்கட்சி தலைமையில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 5 2
செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் 24 மணி நேரப் பணிப் புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய...

25 6914c3f00b61f
செய்திகள்அரசியல்இலங்கை

நுகேகொடையில் நவம்பர் 21 பேரணி: அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டவே இந்த ஆர்ப்பாட்டம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்க எதிர்ப்புப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு அளித்த...

25 690c62aa700e2
செய்திகள்இலங்கை

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர் 2 கிலோ ஹெரோயினுடன் கைது: நவம்பர் 26 வரை விளக்கமறியலில் நீதிமன்று உத்தரவு!

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர், சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...