WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
செய்திகள்அரசியல்இலங்கை

மைத்திரியை சீண்டினால் விளைவுகள் விபரீதமாகும்!! – தயாசிறி எச்சரிக்கை

Share

“எமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை தொடர்ந்தும் சீண்டினால் விளைவு விபரீதமாக இருக்கும்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

” ஒரு முறை அல்ல, இரு தடவைகள் அல்ல – எமது தலைவரை தொடர்ச்சியாக தாக்கி பேசும் செயலில்தான் மஹிந்தானந்த அளுத்கமகே ஈடுபட்டு வருகின்றார். சேறுபூசும் விதத்தில் போலிக்கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.

அவர் சாக்கடையை கிளறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நன்றாகவே கிளறட்டும், அவ்வாறு கிளறும்போதுதான் குப்பைகள் வெளிவரும்.

நாம் அரச பங்காளிகள். அரசை காக்கவே பாடுபடுகின்றோம். சிலவேளை விமர்சனங்களை முன்வைக்கின்றோம். அது ஜனநாயக உரிமை. தாக்குவதாக இருந்தால் எம்மை தாக்குங்கள். எமது தலைமைமீது கைவைக்க வேண்டாம். எம்மால் பொறுமை காக்க முடியாது.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...