Roshan
செய்திகள்இலங்கை

“கதவு திறந்தே உள்ளது” – மைத்திரி மீது பாயும் இராஜாங்க அமைச்சர்

Share

“அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்யாமல், வெளியேறுங்கள். கதவு திறந்தே உள்ளது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்பு கூறவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாகவும் இருவரும் பொறுப்பு கூறவேண்டும். மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான பொறுப்பையும் இவர்கள் ஏற்க வேண்டும்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க போராடுபவர்கள். அவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. ஆனால் சிலர் உள்ளே இருந்துகொண்டு காலைவாரப் பார்க்கின்றனர். அத்தகையவர்கள் வெளியேறலாம். பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிடுவதுபோல சலூன் கதவு திறந்தே உள்ளது.”- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...