corona 2
செய்திகள்உலகம்கட்டுரைவிஞ்ஞானம்

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்” எனப் பெயரிட்டது?

Share

கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது.

திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக் குறிக்கும் (12th letter of the alphabet) “மு”(mu) என்னும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு தோன்றிய ஆபிரிக்கத் திரிபுக்கு வரிசைப்படி 13 ஆவது எழுத்தைக் குறிக்கின்ற “நு” (“Nu”) என்ற பெயரோ அல்லது 14 ஆவது கிரேக்க இலக்கத்தைக் குறிக்கின்ற ஜி(“Xi”) என்ற பெயரோதான் சூட்டப்பட்டிருக்க வேண்டும்.

சில குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து விட்டு 15 ஆவது இலக்கத்தைக் குறிக்கின்ற “ஒமெக்ரோன்” என்ற பெயரைச் சூட்ட முடிவுசெய்யப்பட்டதாக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

“நு” (Nu) என்ற பெயர் ஆங்கில வார்த்தையான “நியூ” (New ) என்ற சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பு ஒலியைக் கொண்டிருப்பதால் குழப்பத்தை உருவாக்கும் எனக் கருதி அது தவிர்க்கப்பட்டது. “ஜி” (Xi) என்பது உலக அளவில் பரவலாகப்-பிரபலமாகப் பயன்பாட்டில் உள்ள குடும்பப் பெயர் (family name). அத்துடன் சீன அதிபரது பெயரையும் (Xi Jinping) அது குறிக்கிறது. எனவே தொற்று நோய்க்குப் பெயரிடுவதில் இனம், மொழி, சமூகம், நாடுகள் சார்ந்த குழப்பங்களைத் தவிர்க்கவேண்டும் என்ற நோக்குடன் பெயர் தெரிவுகள்
செய்யப்படுகின்றன என்று ஐ. நா. அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

புதிய திரிபுகள் முதலில் கண்டறியப்படுகின்ற நாடுகளின் பெயர்களில் அழைக்கப்படுவதால் ஏற்படுகின்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே அவற்றுக்குத் தனித் தனியே பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து வைரஸ் அல்லது ஆங்கில வைரஸ் என அழைக்கப்பட்ட திரிபுக்கு “அல்பா திரிபு” (Alpha variant) என்று முதலில் பெயரிடப்பட்டது. அதன் பிறகு கொவிட் வைரஸின் பல திரிபுகளுக்கு அவ்வாறு கிரேக்க இலக்கப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றில் “கவலைக்குரியது” என்று சுகாதார நிறுவனத்தால் தர நிலைப்படுத்தப்பட்டவற்றில் ஒமெக்ரோன் ஐந்தாவது திரிபு ஆகும்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...