corona 2
செய்திகள்உலகம்கட்டுரைவிஞ்ஞானம்

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்” எனப் பெயரிட்டது?

Share

கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது.

திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக் குறிக்கும் (12th letter of the alphabet) “மு”(mu) என்னும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதன் பிறகு தோன்றிய ஆபிரிக்கத் திரிபுக்கு வரிசைப்படி 13 ஆவது எழுத்தைக் குறிக்கின்ற “நு” (“Nu”) என்ற பெயரோ அல்லது 14 ஆவது கிரேக்க இலக்கத்தைக் குறிக்கின்ற ஜி(“Xi”) என்ற பெயரோதான் சூட்டப்பட்டிருக்க வேண்டும்.

சில குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து விட்டு 15 ஆவது இலக்கத்தைக் குறிக்கின்ற “ஒமெக்ரோன்” என்ற பெயரைச் சூட்ட முடிவுசெய்யப்பட்டதாக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

“நு” (Nu) என்ற பெயர் ஆங்கில வார்த்தையான “நியூ” (New ) என்ற சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பு ஒலியைக் கொண்டிருப்பதால் குழப்பத்தை உருவாக்கும் எனக் கருதி அது தவிர்க்கப்பட்டது. “ஜி” (Xi) என்பது உலக அளவில் பரவலாகப்-பிரபலமாகப் பயன்பாட்டில் உள்ள குடும்பப் பெயர் (family name). அத்துடன் சீன அதிபரது பெயரையும் (Xi Jinping) அது குறிக்கிறது. எனவே தொற்று நோய்க்குப் பெயரிடுவதில் இனம், மொழி, சமூகம், நாடுகள் சார்ந்த குழப்பங்களைத் தவிர்க்கவேண்டும் என்ற நோக்குடன் பெயர் தெரிவுகள்
செய்யப்படுகின்றன என்று ஐ. நா. அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

புதிய திரிபுகள் முதலில் கண்டறியப்படுகின்ற நாடுகளின் பெயர்களில் அழைக்கப்படுவதால் ஏற்படுகின்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவே அவற்றுக்குத் தனித் தனியே பெயர்களைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து வைரஸ் அல்லது ஆங்கில வைரஸ் என அழைக்கப்பட்ட திரிபுக்கு “அல்பா திரிபு” (Alpha variant) என்று முதலில் பெயரிடப்பட்டது. அதன் பிறகு கொவிட் வைரஸின் பல திரிபுகளுக்கு அவ்வாறு கிரேக்க இலக்கப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றில் “கவலைக்குரியது” என்று சுகாதார நிறுவனத்தால் தர நிலைப்படுத்தப்பட்டவற்றில் ஒமெக்ரோன் ஐந்தாவது திரிபு ஆகும்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....