CVVigneswaran
செய்திகள்இலங்கை

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம்

Share

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால ஒழுங்கு விதிகள் சட்டம் இராணுவ ஆட்சி நோக்கி நாட்டை கொண்டுசெல்ல வாய்ப்புக்கள் உண்டு.

இவ்வாறு தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில்.

நாட்டில், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால ஒழுங்கு விதிகள், நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டுசெல்ல வழியமைக்கக் கூடியவை.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கான நியமனங்கள் இராணுவத்துடன் தொடர்புடையோராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் அஞ்சுகிறோம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது உறவுகளைரத் தேடியும் நீதி கோரியும் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய உளவுப் பிரிவுகளால் மிரட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன,

அண்மையில், வடக்கு மாகாணத்துக்கு சிங்களம் பேசும் பிரதம செயலாளர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

படுகொலைகள் மற்றும் நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது – என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...