Flight 1
செய்திகள்அரசியல்இலங்கை

இவ்வாண்டு இறுதிக்குள் விமான சேவையில் ஏற்படப்போகும் மாற்றம்!

Share

நாட்டில் மேலும் ஐந்து புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் புதிய விமான நிறுவனங்களின் சேவைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சகம் சர்வதேச அளவில் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை தொடங்கவுள்ளன.

அதன்படி, சுவீடனின் Edelweiss நவம்பர் 1 முதல் வாரத்திற்கு ஒரு விமானத்தையும், ரஷ்யாவின் Aeroflot வாரத்திற்கு இரண்டு முறையும் சேவையில் ஈடுபடும்.

மேலும் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ரஷ்யாவின் Air Azure வாரத்திற்கு இரண்டு முறையும், இத்தாலியின் Nyos Air வாரத்திற்கு இரண்டு முறையும் சேவையில் ஈடுபடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...