Susil Premajayantha
செய்திகள்அரசியல்இலங்கை

மக்களின் வாழ்க்கை சுமையை வர்த்தமானி வெளியிடுவதால் தீர்க்க முடியாது!

Share

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொது மக்கள் பாரிய இன்னலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திலேயே அவர் இது இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,  நாட்டில் நிலவும் காலநிலை, உரம் மற்றும் களைநாசினி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ எவரும் புறக்கணிக்க முடியாது.

வர்த்தமானிகளை வெளியிடுவதன் மூலம் மாத்திரம் தீர்வுகளை வழங்க முடியாது.

பல நிறுவனங்கள் விலையை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் பராமரிப்பதற்கு பொறுப்பாக இருப்பதாகவும், எனவே அத்தகைய பிரிவுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பொறுப்பான நபர்களுடன் கலந்துரையாடி அத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்படாததால் பல வர்த்தமானிகளை வெளியிட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டது.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மக்களின் சுமையை குறைக்க பொருத்தமான பொருளாதார மாதிரியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...