gotabaya rajapaksa with mahinda rajapaksa 2
செய்திகள்அரசியல்இலங்கை

பெரிய அரசியல் திருப்பம் வரப்போகிறதாம்- வெளியான அதிர்ச்சித் தகவல்

Share

அடுத்த ஆண்டு பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் அப்போது, பொது எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

மொனராகலை மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்முரண்பாடுகள் காரணமாக தற்போதைய அரசாங்கம் நீண்டகாலம் ஆட்சியில் இருக்காது என்பதால் அடுத்த ஆண்டு ஒரு அரசியல் திருப்பம் ஏற்படும்.

இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி காலத்தின் தேவை. அடுத்த வருடம் இந்த கூட்டணி வடிவம் பெறும். அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் தற்போது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி வருகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க தேசத்தை கட்டியெழுப்பக்கூடிய திறமையான தலைவர். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்லர்.

எங்கள் அனைவரதும் பொது எதிரி அரசு. அடுத்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிறர் ஒன்றிணைந்து ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Ruwan Wijewardene 1

ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள நாம் எம்மை ஒழுங்கமைத்துக் கொண்டு இந்த திருப்பத்திற்கு தயாராக வேண்டும். சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கை மேலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும்.

விமான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும். இலங்கை வழியாக விமானங்கள் பறக்க முடியாது. இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்.

இதன் விளைவாக டொலர் பிரச்சினை மோசமாகிவிடும். உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் என தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...