178818 vaccine 1
செய்திகள்இலங்கை

தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!

Share

தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!

நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதற்கமைய, 1 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 1 கோடியே 33 லட்சத்து 71 ஆயிரத்து 290 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 70 லட்சத்து 260 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. இதேவேளை சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 11 லட்சத்து 9 ஆயிரத்து 346 பேருக்கு போடப்பட்டுள்ளது,

இதேவேளை, இதுவரை 8 லட்சத்து 91 ஆயிரத்து 734 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 15 லட்சத்து 9 ஆயிரத்து 89 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும் 43 ஆயிரத்து 450 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதுவரை 43 லட்சத்து 6 ஆயிரத்து 41 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 231 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது,

அதேபோல், 77 லட்சத்து 2 ஆயிரத்து 955 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 75 லட்சத்து 4 ஆயிரத்து 690 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...