SHUTTERSTOCK GUNSHOT GUN FIRING
செய்திகள்இந்தியா

மணிப்பூரில் இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற பயங்கரம்!

Share

இந்தியா மணிப்பூரில், இறுதிச்சடங்கு நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் செயற்பட்டுவரும் குகி என்னும் பயங்கரவாத அமைப்பு, பொதுமக்கள் மற்றும் படையினர் மீது இடையிடையே தாக்குதல்களை நடாத்தி வருகிறது.

இந்நிலையில் குகி அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, மணிப்பூரிலுள்ள ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த 10ஆம் திகதி படையினர் தாக்குதல் நடாத்திய தாக்குதலில் குகி பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு, அம்மாநிலத்தின் கங்மம் கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது அக்கிராம மக்கள் பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், அங்கு வந்த குகி பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கங்மம் கிராம மக்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்துத் தப்பியோடிய பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...