1528176000 protesst l
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 5-க்குள் தீர்வு வேண்டும்; இல்லையேல் போராட்டம் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை!

Share

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

கல்விச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (22) முற்பகல் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

பாடசாலை நேரத்தை நீடிப்பது அல்லது மாற்றுவது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து தொழிற்சங்கங்கள் பிரதமரிடம் விளக்கமளித்தன. தொழிற்சங்கங்களின் கருத்துக்களுக்குப் பிரதமர் ஓரளவிற்குச் செவிசாய்த்ததுடன், இது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய தொழிற்சங்கங்கள், தற்போது ஜனவரி 5 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளன.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள கல்விச் சீர்திருத்தங்களில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் நலன்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தன்னிச்சையான முடிவுகளை ஏற்கப்போவதில்லை எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...