gajendrakumar 768x461 1
செய்திகள்இலங்கை

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

Share

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை தன் முன்பு மண்டியிடச்செய்துள்ளார். அதேநேரம் துப்பாக்கியை காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இந்த செயலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

கைதிகள் தொடர்பான விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே, அவர்களைக் கொல்வேன் என அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பார்வை இலங்கையில் இருக்கும் நிலையில்கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இந்த சம்பவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாவிட்டாதால் தமிழர்களின் நிலைமை மிக மோசமாக மாறும். இவ் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை குறித்த இணை நாடுகளிடம் வலியுறுத்துகிறேன் – என்றார்.

Lohan Ratwatte

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...