gajendrakumar 768x461 1
செய்திகள்இலங்கை

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

Share

துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை தன் முன்பு மண்டியிடச்செய்துள்ளார். அதேநேரம் துப்பாக்கியை காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இந்த செயலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

கைதிகள் தொடர்பான விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே, அவர்களைக் கொல்வேன் என அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பார்வை இலங்கையில் இருக்கும் நிலையில்கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இந்த சம்பவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாவிட்டாதால் தமிழர்களின் நிலைமை மிக மோசமாக மாறும். இவ் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை குறித்த இணை நாடுகளிடம் வலியுறுத்துகிறேன் – என்றார்.

Lohan Ratwatte

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...