WhatsApp Image 2021 09 05 at 11.28.19 PM
செய்திகள்இலங்கை

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

Share

முடிந்தால் மக்களைப் பற்றி பேசு! – ஞானசாரரை சீண்டும் சத்தாரத்தன தேரர்

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? இவ்வாறு பொது பலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஞானசார உன்னிடம் எந்தவித தேச பற்றும் கிடையாது. இந்த நாட்டில் உனக்கு பிரச்சினையாக விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமா பிரச்சினை? உனக்கு பலம் இருந்தால் பேசு”

இந்த நாட்டில், ஜனாதிபதி,பிரதமர் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய பெரிய கொள்கலன்களில் போதைபொருள்களை நாட்டுக்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு தாராளமாக வழங்குகின்றனர், நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் பறந்து கிடக்கிறது.

பாதுகாக்கப்பட்ட காடுகள் உட்பட அனைத்தையும் வெட்டி அழிக்கிறார்கள், இது சிங்கள தேசம், இந்த சிங்கள தேசத்தில் சாராயக்கடைகள், மதுபானசாலைகள் போன்றவற்றுக்கு பொறுப்பாக
ஜொன்ஸ்டன் போன்ற நபர்கள் உள்ளார்கள்.

என்னை இவர்கள் கொன்றுபோட்டாலும், நான் எவ்வித பயமும் இல்லது சொல்ல வரும் உண்மையை வெளிப்படையாக எடுத்துச் சொல்வேன் – எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஞானசார நீ பெரிய சிங்கம் என நினைத்துக்கொண்டிருக்கிறாய், அவ்வாறு நினைப்பாயானால் நான் உனக்கு சவால் விடுகிறேன், இந்த நாட்டில் மக்கள் உன்ன உணவின்றி இறக்கின்றனர், வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றி பேசு” எனவும் சவால் விடுத்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் திருவிழா: 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்தடைந்த உலகளாவிய விஐபிக்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா –...

image 1200x800 23
செய்திகள்உலகம்

ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு மத்தியில் போர் தீவிரம்! – ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; ஒடேசா இருளில் மூழ்கியது!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனீவாவில் இன்று...

image 1200x800 24
செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான போரில் இலங்கையின் மகா பாய்ச்சல்! -அநுர அரசாங்கத்திற்கு மக்கள் பாராட்டு!

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர...