taliban
செய்திகள்உலகம்

பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைக்கும் தலிபான்கள்!

Share

ஆப்கானில் தலிபான்கள் பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு, முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி ஆட்சியின்போது பணிபுரிந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் உள்பட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கான் இராணுவம், காவல்துறையினர், புலனாய்வு அலுவலர்கள் என மொத்தம் 47 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.

இப்பிரச்சனை பெரும் சர்ச்சையை அங்கு கிளப்பியுள்ளது.

ஆப்கானில் முந்தைய ஆட்சியில் பணிபுரிந்த நபர்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளைத் தலிபான்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உலகநாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அவ் அறிக்கையில்,

ஆப்கானில் இடம்பெறும் கடத்தல்கள் கடுமையான மனித உரிமை மீறல்கலாகும்.

இக் கடத்தல் நடவடிக்கைகள் தலிபான் அறிவித்த பொது மன்னிப்புக்கு முரணானவை. இந்த நடவடிக்கைகள் தொடருமாயின் தலிபான்கள் மீது கடும் நடவடிக்கைள் எடுக்கப்படுமென உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...