taliban
செய்திகள்உலகம்

பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைக்கும் தலிபான்கள்!

Share

ஆப்கானில் தலிபான்கள் பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு, முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி ஆட்சியின்போது பணிபுரிந்த பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் உள்பட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கான் இராணுவம், காவல்துறையினர், புலனாய்வு அலுவலர்கள் என மொத்தம் 47 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.

இப்பிரச்சனை பெரும் சர்ச்சையை அங்கு கிளப்பியுள்ளது.

ஆப்கானில் முந்தைய ஆட்சியில் பணிபுரிந்த நபர்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளைத் தலிபான்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உலகநாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அவ் அறிக்கையில்,

ஆப்கானில் இடம்பெறும் கடத்தல்கள் கடுமையான மனித உரிமை மீறல்கலாகும்.

இக் கடத்தல் நடவடிக்கைகள் தலிபான் அறிவித்த பொது மன்னிப்புக்கு முரணானவை. இந்த நடவடிக்கைகள் தொடருமாயின் தலிபான்கள் மீது கடும் நடவடிக்கைள் எடுக்கப்படுமென உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...