Gajendrakumar
செய்திகள்இலங்கை

குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் ! – மனித உரிமைகள் பேரவைக்கு த.தே.ம.மு. கடிதம்

Share

குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் ! – மனித உரிமைகள் பேரவைக்கு த.தே.ம.மு. கடிதம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையெப்பமிட்டு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்காது. எனவே பேரவையில் பொறுப்புக்கூறல் விடயம் இருக்கும்வரை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் அரசியல் தீர்வும் தாமதமாகும்.

இவற்றை கருத்தில் கொண்டு, இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் – கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டு அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து, மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே ஜெனீவாவுக்கு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...